sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பொங்கல் தொகுப்பில் பணத்திற்குஅரசு ஊழியர்கள் அலைக்கழிப்பு; ஒரே தவணையில் அனைத்தும் வழங்க வலியுறுத்தல்

/

பொங்கல் தொகுப்பில் பணத்திற்குஅரசு ஊழியர்கள் அலைக்கழிப்பு; ஒரே தவணையில் அனைத்தும் வழங்க வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பில் பணத்திற்குஅரசு ஊழியர்கள் அலைக்கழிப்பு; ஒரே தவணையில் அனைத்தும் வழங்க வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பில் பணத்திற்குஅரசு ஊழியர்கள் அலைக்கழிப்பு; ஒரே தவணையில் அனைத்தும் வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜன 12, 2024 06:38 AM

Google News

ADDED : ஜன 12, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டிய ரூ.ஆயிரம் வழங்காமல் ரேஷன்கடை பணியாளர்கள் அழைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகள் மூலம் 4.26 லட்சம் அரிசிபெறும் ரேஷன் கார்டுதார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி, முழு கரும்பு, பணம் ரூ. ஆயிரம் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பொங்கல் தொகுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டாலும் பின்னர் அரிசி பெறும் ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு நேற்று முன்தினம் முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் முதலில் அறிவிக்கப்பட்ட ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் அதாவது டோக்கன் கொண்டு வருபவர்களுக்கு மட்டும் பொங்கல் தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. டோக்கன் இன்றி வருபவர்களுக்கு தொகுப்பில் உள்ள பிற பொருட்கள் வழங்கப்பட்டாலும் பணம் ரூ.ஆயிரம் வழங்காமல் ரேஷன் கடைபணியாளர்கள் திருப்பி அனுப்புகின்றனர். அவர்களிடம் உங்கள் பட்டியல் வரவில்லை, நாளை வாருங்குள், அடுத்த நாள் வாருங்கள் என அலைக்கழிப்பு செய்கின்றனர். இந்த அலைக்கழிப்பு பெரியகுளம் பகுதி ரேஷன் கடைகளில் அதிகம் காணப்படுகிறது.

கடை பணியாளர்களை கேட்டால் கூட்டுறவுத்துறையில் இருந்து பணம் வழங்குவதற்காகன உத்தரவு வரவில்லை என்கின்றனர். அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு அனைத்தும் அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us