ADDED : ஜூலை 25, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சென்னை கோடம்பாக்கம் அழகிரிபுரத்தை சேர்ந்தவர் முருகன்.
இவரது மகள் மகாலட்சுமி 18, சென்னையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், தேனி மாவட்டம் புலிகுத்தியில் உள்ள தனது தாயார் லட்சுமி வீட்டில் விட்டு சென்றுள்ளார். 2 ஆண்டுகளாக புலிகுத்தியில் இருந்த மகாலட்சுமி 2 நாட்களுக்கு முன் கோயிலிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பாட்டி லட்சமி புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.