sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரன் கைது

/

நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரன் கைது

நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரன் கைது

நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரன் கைது


ADDED : ஜூன் 04, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: அடிமாலி அருகே நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே மச்சிபிளாவ் பகுதியில் மேரி 95, தனது இளைய மகன் தம்பி, மருமகள் டிஷா ஆகியோருடன் வசித்து வருகிறார். ஜூன் ஒன்றில் மகன், மருமகள் சர்ச்க்கு சென்றதால் வீட்டில் மேரி தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த மேரியின் மூத்த மகன் மைக்கேலின் மகன் அபிலாஷ் 44, பாட்டியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றதுடன், அவர் அணிந்து இருந்த இரண்டரை பவன் தங்க செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய மேரியை, சர்ச்சில் இருந்து வீடு திரும்பிய மகன், மருமகள் ஆகியோர் மூணாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததுடன் போலீசிலும் புகார் அளித்தனர். அடிமாலி போலீசார் அபிலாஷை கைது செய்தனர். இது போன்று பல்வேறு குற்றப்பின்னணி வழக்குகளில் அபிலாஷ் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us