/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு ! உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் ஆர்வம்
/
மாவட்டத்தில் திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு ! உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் ஆர்வம்
மாவட்டத்தில் திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு ! உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் ஆர்வம்
மாவட்டத்தில் திராட்சை, வாழை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு ! உறுதி செய்த வருவாய் கிடைப்பதால் ஆர்வம்
ADDED : டிச 28, 2025 05:38 AM

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை, வாழை பழங்களுக்கு உறுதி செய்யப்பட்ட வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் திராட்சை,வாழை சாகுபடி பரப்பளவு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதி என்ற அந்தஸ்தை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது.
இதற்கு காரணம் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மழை, மண் வளமாகும். இந்தியாவில் ஏற்றுமதி ரகங்களையும், ஒயின் தயாரிப்பு ரகங்களையும் சாகுபடி செய்யும் புனேயில் கூட ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே நடைபெறுகிறது.
ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டிற்கு 3 அறுவடை செய்கின்றனர். இது விவசாயிகளுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் உள்ளது.
சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாரயணத்தேவன்பட்டி, கம்பம், கூடலூர், அணைப்பட்டி, ராயப்பன்பட்டி ஆகிய ஊர்களில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி வட்டாரத்தில் விதையில்லா திராட்சையும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஓடைப்பட்டி வட்டாரத்திலும் விதையில்லா திராட்சை சாகுபடி குறைந்து அங்கேயும் பன்னீர் திராட்சைக்கு விவசாயிகள் மாறி உள்ளனர். தற்போது மழை இன்றி அதிகபனிப் பொழிவு உள்ளது. இருந்த போதும் கிலோ ரூ.50 வரை விலை கிடைத்து வருகிறது.
கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டாரங்களில் சுமார் 1700 எக்டேர் பரப்பில் திராட்சை சாகுபடியாகிறது. சமீபத்தில் திராட்சை சாகுபடி பரப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று வாழையும், மாவட்டம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது செவ்வாழை, நாழிப் பூவன் என அனைத்து ரகங்களுக்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது.
வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு இதில் திராட்சை சாகுபடியாளர்கள் வாழைக்கும், வாழை சாகுபடியாளர்கள் திராட்சைக்கும் அடிக்கடி மாறி கொள்வார்கள். ஆனால் இரண்டு பயிர்களும் சாகுபடி பரப்பில் தேனி மாவட்டத்தில் முன்னிலை பெறுகிறது.
இது தொடர்பாக திராட்சை மற்றும் வாழை சாகுபடியாளர்கள் கூறுகையில், ' திராட்சை, வாழையில் அடிக்கடி மகசூல் குறைவு, விலை இல்லாதது, நோய் தாக்குதல் என இருந்தாலும், உறுதி செய்யப்பட்ட வருவாய் கிடைக்கிறது. எனவே கம்பம் பள்ளத்தாக்கில் 30 முதல் 40 சதவீதம் இரு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. நிலையான வருவாய் என்ற அம்சம் காரணமாகவே திராட்சை, வாழை மகசூல் பரப்பு அதிகரித்து வருகிறது,'என்கின்றனர்.

