ADDED : ஆக 24, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நக்கலபட்டி பேச்சியம்மாள் கோவில்பட்டி மாயன் 55. இவர் விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்த நிலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஜூலை 17 ல் கைது செய்தனர்.
இந்நிலையில் மாயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹாபிரியா கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் கஞ்சாவியாபாரி மாயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாவட்ட சிறையில் இருந்த அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.