sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சின்னமனூரில் சுகாதார பணியில் சுணக்கம்

/

சின்னமனூரில் சுகாதார பணியில் சுணக்கம்

சின்னமனூரில் சுகாதார பணியில் சுணக்கம்

சின்னமனூரில் சுகாதார பணியில் சுணக்கம்


ADDED : ஜூலை 06, 2025 04:18 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூரில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி,குப்பை அகற்றும் பணியில் சுணக்கம் நிலவுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சின்னமனூரில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எழில்நகர், அண்ணாமலை நகர், மின் நகர், சிவசக்தி நகர், கண்ணம்மா கார்டன், லட்சுமி நகர் என விரிவாக்க பகுதிகள் உள்ளன. நகராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், குப்பை அகற்றும் பணி தனியார்மயமாக்கி உள்ளனர். நிரந்தர பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் நகர் முழுவதும் சாக்கடை சுத்தம் செய்யாத நிலை உள்ளது. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் மயமாக்கப்பட்டதால் அவர்கள் குப்பை முறையாக அகற்றுவதில்லை என மக்கள் புகார்கூறுகின்றனர். நகரின் சுகாதாரம் பற்றி துப்புரவு பிரிவு அலுவலர்களும், கமிஷனரும் கண்டு கொள்ளமால் உள்ளனர். நகரின் சுகாதாரம் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us