sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கத்தரியில் பூச்சி துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலைத்துறை விளக்கம்

/

கத்தரியில் பூச்சி துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலைத்துறை விளக்கம்

கத்தரியில் பூச்சி துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலைத்துறை விளக்கம்

கத்தரியில் பூச்சி துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலைத்துறை விளக்கம்


ADDED : ஜன 27, 2025 04:54 AM

Google News

ADDED : ஜன 27, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: 'கத்தரி பயிரில் குறுத்து, காய்களைத் தாக்கும் துளைப்பான் பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.' என, தோட்டக்கலைத் துணை இயக்குனர் நிர்மலா ஆலோசனை வழங்கி உள்ளார்.

அவர் கூறியதாவது: ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, சின்னமனுார் என அனைத்து வட்டாரங்களிலும் சேர்த்து 265 எக்டேர் பரப்பில் கத்தரி சாகுபடியாகிறது.

கத்தரியில் காய், குருத்து துளைப்பான் பாதித்த செடிகளில் குருத்துப்பகுதி வாடிய நிலையில் காணப்படும். காய்கள், தண்டுப் பகுதியில் திசுக்களை கழிவுகளாக ஆங்காங்கே செடிகளில் காணப்படும்.

இலைகள் வாடி, மொட்டு, சிறுகாய்கள் உதிரும். இந்தப் பூச்சியை கட்டுப்படுத்த பாதித்த செடிகளின் நுனித்தண்டு பகுதியை சேகரித்து அழித்து விட வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ச்சியாக கத்தரி பயிரிட கூடாது. எக்டேருக்கு 12 வீதம் இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும்.

எக்டேருக்கு 25 கிலோ வேப்பம் விதைச்சாற்றினை 10லி., தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி., அசாடிராக்டின், இமாமெக்டின் பென்சோயட் மருந்து 4 கிராம், புழுபென்டிமைடு 7.5 கிராம் என ஏதாவது ஒரு மருந்தை தெளித்து பயன் பெறலாம்., என்றார்.






      Dinamalar
      Follow us