ADDED : ஜூலை 14, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: திண்டுக்கல் லோயர் கேம்ப் அகல ரயில் பாதை அமைத்திட வலியுறுத்தி தேனி பங்களாமேட்டில் திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை பேராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
குழு நிர்வாகிகள் மெல்வின், அந்தோணி பிரான்சிஸ், கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதம் மாலை 5:00 மணியுடன் நிறைவு பெற்றது. வழக்கறிஞர் முத்துராமலிங்கம், தி.மு.க., அயலக அணி நிர்வாகி ராஜன், வர்த்தக பிரமுகர் கதிரேசன் ஆகியோர் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.