ADDED : செப் 30, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: திருமலாபுரம் அருகே கருத்தமலைபட்டியை சேர்ந்தவர் சுமதி 50, அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவரது கணவர் நீதிராஜ் 54, வீட்டில் இருந்துள்ளார்.நேற்று முன் தினம் வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிராஜ் மனைவி சுமதி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.