sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இடுக்கி மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

/

இடுக்கி மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

இடுக்கி மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

இடுக்கி மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை


ADDED : ஜன 28, 2024 05:23 AM

Google News

ADDED : ஜன 28, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளில் சவாரிக்கு ஈடுபடுத்தப்படும் விலங்குகளுக்கு லைசென்ஸ், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அவர் தலைமையில் நேற்று நடந்த மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சப் கலெக்டர் அருண் கே.நாயர், திட்ட அலுவலர் தீபா சந்திரன் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் மலையோர பகுதிகளுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கேரள அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். சுற்றுலா பகுதிகளில் சவாரிக்கு ஈடுபடுத்தப்படும் விலங்குகளுக்கு லைசென்ஸ், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றையும் மூணாறு, மறையூர் ஆகிய பகுதிகளில் சாகச சவாரிக்கு பயன்படுத்தப்படும் ஜீப்புகளை ஆய்வு செய்து அவற்றின் தகுதியையும் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் பல பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததால் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு அதிரடி படையினரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மூணாறு, வண்டிபெரியாறு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூர்வாசிகளை உட்படுத்தி விரைவு மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மூணாறு நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் முக்கிய பணிகள் நடந்து வருவதாக இணை இயக்குனர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us