/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்; இரவில் தங்கி பணி புரியும் பெண்கள் அச்சம்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்; இரவில் தங்கி பணி புரியும் பெண்கள் அச்சம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்; இரவில் தங்கி பணி புரியும் பெண்கள் அச்சம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்; இரவில் தங்கி பணி புரியும் பெண்கள் அச்சம்
ADDED : மே 25, 2025 06:50 AM
தேனி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவில் தங்கி பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதால் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி செய்திடவும், புதிய கட்டடங்களுக்கு உறுதியான மரக்கதவு, இரும்பு ஜன்னல் அமைத்திட வேண்டும் என பணியாளர்கள் கோரி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையம் மொத்தம் 43 உள்ளன.
192 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி சிகிச்சை, மகப்பேறு கால தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. மக்களைத்தேடி மருத்துவம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலையில் டாக்டர், நர்ஸ்கள், பணியாளர்கள் பணி செய்கின்றனர். இரவில் பல இடங்களில் ஒரு நர்ஸ், உதவியாளர் என பெண் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலர் பணி இல்லாததால் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஊரக பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா வசதிகள், காவலர் வசதி இல்லை. இதனால் அச்சத்துடன் பயணிபுரியும் நிலை உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கூறுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் சிலர் போதையில் வந்து பணியாளர்களுடன் பிரச்னையில் ஈடுபடுகின்றனர்.
சிகிச்சையின் போது ஆத்திரத்தில் வரும் சிலர் பணியாளர்கள் மீது கோபத்தை காட்டுகின்றனர். அங்குள்ள கதவு, ஜன்னல்களை தட்டி அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற நிகழ்வு அடிக்கடி நிகழ்கிறது.
இச் சூழலில் தற்போது புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்டு வரும் புது கட்டடங்களுக்கு மரக்கதவுகளுக்கு பதிலாக உறுதி இல்லாத பி.வி.சி.,பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கதவுகள் பொருத்துகின்றனர்.
இதனால் திருட்டு, பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமரா வசதி செய்திடவும், மரக்கதவுகள், இரும்பு கேட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றனர்.