sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு

/

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு


ADDED : ஏப் 14, 2025 03:39 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 450 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வைகை அணையில் இருந்து டிச.,18 முதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது.

இதனால் அணையில் இருந்து சில நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும், சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 350 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர், நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 450 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று வைகை அணை நீர்மட்டம் 56.63 அடி ( அணை மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து ஏதும் இல்லை. மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us