sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வைகை அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

/

 வைகை அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

 வைகை அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

 வைகை அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு


ADDED : டிச 29, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை நீர்மட்டம் இந்தாண்டு அக்., 27ல் 70.24 அடி வரை உயர்ந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. மழையால் அணைக்கு வந்த நீர், இருப்பில் இருந்த நீர் சில மாதங்களாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம், குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதால் அணை நீர் தற்போது 54.99 அடியாக குறைந்து உள்ளது.

டிச.25ல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு நிறுத்தப்பட்ட நீர், டிச. 27ல் வினாடிக்கு 1050 கன அடி வீதம் மீண்டும் திறந்து விடப்பட்டது. கால்வாய் வழியாக பாசனத்திற்கு வெளியேறும் நீரின் அளவு நேற்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1250 கன அடியாக உயர்த்தப்பட்டது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 545 கன அடி ஆகும். குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us