ADDED : டிச 29, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ஐயப்ப பக்த சபை சார்பில் ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம் பூஜை நடந்தது.
சபை குருநாதர் ஜெயா தலைமை வகித்தார். தலைவர் ஆறுமுகம், செயலாளர் செல்வகணபதி, பொருளாளர் பாலு முன்னிலை வகித்தனர். ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கமலக்கண்ணன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன.

