ADDED : ஆக 15, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-- பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, ஓவியம், மாறுவேடம், மவுனமொழி நாடகம், பாடல், பரதநாட்டியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் லதா, செயலாளர் விஜயராணி, தலைமையாசிரியர்கள் ரவிச்சந்திரன், முத்துகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினர். சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.-