/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலங்கள்
/
இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலங்கள்
ADDED : நவ 27, 2024 08:37 AM

கூடலுார், : கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. 1949 ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொண்டதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26 ல் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று பள்ளியில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக எடுத்துரைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் குறிப்புகளுடன் பள்ளி வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் நினைவுக்கல் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதை நினைவு கூறும் வகையில் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்: இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் கைலாசபட்டி திரவியம் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். டி.எஸ்.பி., நல்லு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்து டெப்போவில் துவங்கி மூன்றாந்தல் தேவர் சிலை அருகே முடிந்தது. தென்கரை, வடகரை ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார்கள், பசுமை தோழர்கள், கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்ட பொறுப்பாளர் முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன் செய்திருந்தார்.
தேனி: இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 நவ., 26ல் ஏற்றக்கொள்ளப்பட்டது. இதனால் இந்திய அரசியலமைப்பு தினம் நவ., 26ல் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் அலுவலக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அரசியலமைப்பு முகவுரையை அரசு அலுவலர்கள் படித்து உறுதியேற்றனர். நிகழ்வில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதன், சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, சி.இ.ஓ., இந்திராணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.