sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆட்டுச்சந்தைக்கு கொட்டகை அமைக்க வலியுறுத்தல்

/

ஆட்டுச்சந்தைக்கு கொட்டகை அமைக்க வலியுறுத்தல்

ஆட்டுச்சந்தைக்கு கொட்டகை அமைக்க வலியுறுத்தல்

ஆட்டுச்சந்தைக்கு கொட்டகை அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 15, 2025 06:50 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் வரி வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகம், ஆடுகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கும் கொட்டகை அமைத்து தர வியாபாரிகள் வலியுறுத்து உள்ளனர்.

வாரந்தோறும் முதல் நாள் (திங்கள்தோறும்) ஆண்டிபட்டி வாரச்சந்தையில் நடக்கும் ஆட்டுச்சந்தை மாவட்ட அளவில் பெரிய சந்தையாகும். சாதாரண நாட்களில் 500 முதல் 700 வரையும், தீபாவளி, தைப்பொங்கல், ஆடி மற்றும் உள்ளூர் பொங்கல் காலங்களில் 2000க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். ஆட்டுச்சந்தை திறந்த வெளியில் இருப்பதால் மழைக் காலங்களில் ஆடுகள், வியாபாரிகள் பாதிப்படைகின்றனர்.

வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடுகளுக்கு தலா ரூ.50 வரை வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் சந்தையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஆடுகள், வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வாரச் சந்தையில் ஆட்டுச் சந்தை நடக்கும் இடத்தில் நிரந்தர கூடாரம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்., என்றனர்.






      Dinamalar
      Follow us