sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கூடுதல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்க வலியுறுத்தல்

/

 கூடுதல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்க வலியுறுத்தல்

 கூடுதல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்க வலியுறுத்தல்

 கூடுதல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்க வலியுறுத்தல்


ADDED : டிச 19, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: காசநோயை கண்டறிந்து சிகிச்சையளிக்க வசதியாக கூடுதலாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் காசநோய் தடுப்பு பிரிவினர் காசநோய் கண்டறியும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் கிராமந்தோறும் சென்று எக்ஸ்ரே எடுத்து, காசநோய் கண்டறிந்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று 20 முதல் 30 பேர்களுக்கு எக்ஸ் ரே எடுத்து வருகிறது. அவர்களிடம் சளி சேகரம் செய்து பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சர்க்கரை, ரத்த அழுத்தம் பாதித்தவர்களையும் டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் அவர்களுக்கு காசநோய் உள்ளதா என்பதை கண்டறிந்து வருகின்றனர். இதனால் பணிப் பளு அதிகாரித்துள்ளது. கூடுதலாக ஒரு வாகனத்தை அனுமதித்தால் பணிகள் எளிதாகும். அரசு மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அனுமதிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ் ரே கருவி இருந்தால், நடமாடும் வாகனங்களுக்கும் பணிப் பளு குறையும், எனவே கூடுதலாக ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும், அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ் ரே கருவிகளும் வைக்க மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us