sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

/

அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்


ADDED : நவ 07, 2025 04:51 AM

Google News

ADDED : நவ 07, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் சாந்தலட்சுமி கூறியதாவது: 2020 செப்., முதல் 2023 ஜூன் வரை பத்தாம் வகுப்பு அரசு பொது, துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் பலர் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாமல் உள்ளனர்.

இந்த சான்றிதழ்களை இன்று (நவ.,7) முதல் 2026 பிப்.,4 வரை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களை பெற தேர்வு கூட நுழைவுச்சீட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் சான்றிதழ்கள் விதிகளின்படி அழிக்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் விபரங்களுக்கு அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us