/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழா
/
பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழா
ADDED : ஜூலை 31, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழா, நண்பர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி, பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் புலிகள் படம் பொறித்த முகமூடி அணிந்தனர். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி பேசினார். பள்ளி ஆலோசகர் பிரைசலின் ஏற்பாட்டில் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கையில் ராக்கி கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, லதா, கவிதா, ராகினி, திவ்யா, பானுப்பிரியா, தெய்வ நிரஞ்சனா, தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.