sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைப்பு

/

பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைப்பு

பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைப்பு

பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைப்பு


ADDED : டிச 18, 2024 06:26 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : நெல் சாகுபடியில்அதிக விளைச்சல் பெறும் விவசாயிகள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம் என வேளாண்துறையினர் தெரிவித்தள்ளனர்.

நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டிற்கான போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் விவசாயி 2 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.தொடர்ந்து 3 ஆண்டுகளாக நெல்சாகுபடி செய்திருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள், குத்தகைதாரர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

அரசு அங்கீகரித்த நெல் ரகங்கள் மட்டும் பயிர் செய்திருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க ரூ.150 யை 2025 மார்ச்31க்குள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது தேனியில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகங்களை விவசாயிகள் நேரில் அணுகலாம். என வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us