sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

/

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்


ADDED : பிப் 16, 2025 02:15 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் நேற்று நிறுத்தப்பட்டது.

இம்மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முறைப்பாசன அடிப்படையில் சில நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும். சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது.

பிப்.10ல் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர் மறுநாள் வினாடிக்கு 525 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

நேற்று காலை கால்வாய் வழியாக திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 300 கன அடி வீதம் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக செல்கிறது. அணை நீர்மட்டம் 63.35 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி).

மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us