ADDED : பிப் 01, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் நீர் திறந்து விடப்பட்டு தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜன.27ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் செல்கிறது. அணை நீர்மட்டம் 65.44 அடியாக இருந்தது.(மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 440 கனஅடி.