/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
/
மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : மார் 17, 2024 06:28 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் சென்னை வின்டோரிக்ஸ் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்நடந்தது.
கணினி அறிவியல் துறை, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன பொதுமேலாளர் கோடீஸ்வரன், உற்பத்தி மேலாளர் ஜெய்கணேஷ் மாணவர்களை தேர்வு செய்தனர்.
கணினி அறிவியல் மாணவர்கள் சவுந்தர்யலட்சுமி, வர்ஷினி, பிரியங்கா, இலக்கியா, கிஷோன் கார்த்திக், தமிழ்ராம் ஆகியோர் ஜூனியர் சப்ட்வேர் இன்ஜினியர் பயிற்சி பணிக்கு மாதம் ரூ.22 ஆயிரம் சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வானவர்களை உறவின்முறைத் தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், கல்லுாரி செயலாளர்கள்ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்புத்துறை அலுவலர் காரத்திகேயன் மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

