/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தூர்வாராத வேலப்பன் குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்ல சிரமம்
/
தூர்வாராத வேலப்பன் குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்ல சிரமம்
தூர்வாராத வேலப்பன் குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்ல சிரமம்
தூர்வாராத வேலப்பன் குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்ல சிரமம்
ADDED : ஜன 07, 2024 07:08 AM

தேவாரம்: தேவாரம் அருகே எரணம்பட்டி வேலப்பன் குளம் ஓடை தூர்வாரததால் செடிகள் வளர்ந்து பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக தேங்கி உள்ளதால் கண்மாயில் மழை நீர் தேக்க முடியாத நிலை உள்ளது.
மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் பெய்யும் மழை நீரானது வேலப்பன் குளத்து ஓடை வழியாக தம்மிநாயக்கன்பட்டி, மறவபட்டி பகுதிகளை கடந்து எரணம்பட்டியில் உள்ள எரணம்குளம் கண்மாயில் தேங்குகிறது.
இந்த நிரம்பும் நீரானது கோணாம்பட்டி, நாகலாபுரம். திம்மிநாயக்கன்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 500 ஏக்கரில் நேரடியாகவும், 300 ஏக்கர் மறைமுகமாகவும், விவசாய கிணறுகளில் நீர் மட்டமும் உயர பயன்படுகிறது.
தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து துவங்கி எரணம்பட்டியில் உள்ள வேலப்பன் குளத்து நீர்வரத்து ஓடையின் இருபுறமும் விவசாயிகள் ஆக்கிரமித்து மரங்கள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
எரணம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள வேலப்பன் குளம் ஓடை தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளானதால் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளாக தேங்கி உள்ளன.
இதனால் துர்நாற்றம் வீசி அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. மழை காலங்களில் மழைநீர் சீராக செல்லவும், எரணம்குளம் கண்மாயில் மழை நீரை முழுவதும் தேக்க முடியாது நிலை உள்ளது.
தற்போது தேவாரம் பகுதியில் மழை பெய்தும் அதற்கான நடவடிக்கை இல்லை. விவசாயிகள் பயன் பெறும் வகையில் தேவாரம் மலை அடிவாரப் பகுதியில் இருந்து வேலப்பன்குளம் நீர்வரத்து ஓடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, ஓடையை தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.