sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு

/

தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு

தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு

தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு


ADDED : பிப் 17, 2025 05:05 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : பகலில் வெயில், இரவில் பொழியும் பனியால் ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூக்கள் விளைச்சலில் பாதிப்பு தொடர்கிறது.

ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனுார், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, கன்னியப்ப பிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம் உட்பட பல கிராமங்களில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி ஆகிறது. கடந்த சில மாதங்களில் பெய்த மழை அதனை தொடர்ந்து பொழியும் பனியால் மல்லிகைச் செடிகளில் விளைச்சல் பாதித்தது. கடந்த சில வாரங்களாக மழைக்கான சூழல் மாறிய பின் பனியின் தாக்கம் கூடுதலாக உள்ளது. இதனால் மல்லிகை செடிகளில் பூக்கள் எடுப்பதில்லை. விளைச்சல் இன்றி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பூ வியாபாரிகள் கூறியதாவது: மழை, பனி காலங்களில் மல்லிகைச் செடிகளில் விளைச்சல் குறையும். விளையும் பூக்களும் அளவில் திரட்சியாக இருக்காது. இதனால் வாசனை குறையும். தற்போது ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு 10 முதல் 20 கிலோ அளவில் மல்லிகை பூக்கள் வரத்து உள்ளது.

கிலோ ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை ஆகிறது. பனியின் தாக்கம் இன்னும் சில வாரங்களில் குறைந்த பின் மல்லிகை பூக்கள் வரத்து அதிகமாகும்.

சீசன் காலங்களில் ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு தினமும் 2 முதல் 5 டன் வரை வரத்து இருக்கும். வரத்து அதிகமானால் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us