/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம்----நாராயணத்தேவன்பட்டி தார் ரோடாக மாற்ற கோரிக்கை
/
கம்பம்----நாராயணத்தேவன்பட்டி தார் ரோடாக மாற்ற கோரிக்கை
கம்பம்----நாராயணத்தேவன்பட்டி தார் ரோடாக மாற்ற கோரிக்கை
கம்பம்----நாராயணத்தேவன்பட்டி தார் ரோடாக மாற்ற கோரிக்கை
ADDED : டிச 28, 2024 06:57 AM
கம்பம் :   கம்பத்திலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு 10 நிமிடங்களில் செல்ல பயன்படும் வீரப்ப நாயக்கன் குளத்து ரோட்டை, தார் ரோடாக அமைக்க  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பத்திலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்ல காமயகவுண்டன்பட்டி சென்று பின் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி சென்று பின் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டி செல்ல வேண்டும். இரண்டு ரோடுகளின் வழியாக செல்லும் போது குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கம்பத்திலிருந்து வீரப்ப நாயக்கன் குளக் கரை வழியாக செல்ல ரோடு அமைக்கப்பட்டது. 5 முதல் 10 நிமிடங்களில் கம்பத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டி  சென்று விடலாம். தற்போது மண் ரோடாக உள்ளது . மழை காலங்களில் இப் பாதையில்  டூவிலர்களில் செல்ல முடியாது. நடந்து செல்வதும் கடினம். எனவே 2 கி.மீ. மண் ரோட்டை, தார் ரோடாக மாற்ற அரசு முன்வர வேண்டும்.
காமயகவுண்டன்பட்டி ரோடு மற்றும் சுருளிப்பட்டி ரோடுகளில் பிரச்னை என்றால், இந்த ரோடு மாற்று ரோடாகவும் பயன்படும். இதனால் விவசாயிகளும் எளிதாக வயல்களுக்கு செல்லவும், விளை பொருட்களை  எளிதாக கொண்டு வர உதவும். இந்த ரோட்டை தார்ரோடாக மாற்ற  கலெக்டர் ஷஜீவனா அரசிற்கு பரிந்துரை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

