sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அகில இந்திய குடியரசு தின கவியரங்கிற்கு கம்பம் கவிஞர் தேர்வு

/

அகில இந்திய குடியரசு தின கவியரங்கிற்கு கம்பம் கவிஞர் தேர்வு

அகில இந்திய குடியரசு தின கவியரங்கிற்கு கம்பம் கவிஞர் தேர்வு

அகில இந்திய குடியரசு தின கவியரங்கிற்கு கம்பம் கவிஞர் தேர்வு


ADDED : டிச 13, 2024 05:01 AM

Google News

ADDED : டிச 13, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்,: அகில இந்திய அளவில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கவியரங்கு கம்பம் பாரதி இலக்கிய பேரவை தலைவர் பாரதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அகில இந்திய வானொலி ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் இருந்து கவிதைகளை வரவேற்று, அதில் சிறந்ததை தேர்வு செய்து குடியரசு தினத்திற்கு முன்னதாக ஒலிபரப்புவார்கள். இதில் தமிழகத்தில் இருந்து கம்பம் பாரதி இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பாரதன் எழுதிய 'வியர்வை துளி' என்ற கவிதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜன 18 ல் மும்பையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெறும் கவியரங்கில் கவிஞர் பாரதன் கவிதையை வாசிக்கிறார்.

கவிஞர் பாரதன் கூறுகையில், அகில இந்திய அளவில் 22 மொழிகளில் கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒருவர். இந்தி மொழிக்கு மட்டும் இருவர். தமிழ் மொழிக்கு எனது கவிதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்திற்கு முதல் நாள் அகில இந்திய வானொலியில் அனைத்து சேனல்களிலும் இந் நிகழ்ச்சி ஒலி பரப்பாகும் என்றார்.






      Dinamalar
      Follow us