ADDED : ஜூலை 07, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள மாவேலிக்கராவில் வசித்து வந்தவர் ஜேம்ஸ் 65, லாரி டிரைவராக உள்ளார்.
கம்பத்திற்கு வந்தவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலின் பேரில் அவரது மகள் பிங்கி மோல் 34, உடலை பெற்றுக் கொண்டார்.
கம்பம் தெற்கு - போலீசார் விசாரிக்கின்றனர்.