sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பம்பை முதல்- சன்னிதானம் வரை ரோப் கார் ரூ.250 கோடியில் அமைக்க கேரள அரசு அனுமதி

/

பம்பை முதல்- சன்னிதானம் வரை ரோப் கார் ரூ.250 கோடியில் அமைக்க கேரள அரசு அனுமதி

பம்பை முதல்- சன்னிதானம் வரை ரோப் கார் ரூ.250 கோடியில் அமைக்க கேரள அரசு அனுமதி

பம்பை முதல்- சன்னிதானம் வரை ரோப் கார் ரூ.250 கோடியில் அமைக்க கேரள அரசு அனுமதி


ADDED : நவ 18, 2024 04:08 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அத்தியாவசிய பூஜை பொருட்களை கொண்டு செல்லவும், அவசர காலங்களில் பயன்படுத்தவும் பம்பை சன்னிதானம் இடையே ரூ.250 கோடியில் ரோப் கார் அமைக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவைப்படும் பூஜை பொருட்களை தலைச்சுமையாகவும், டோலியிலும், கழுதைகள் மூலமாகவும் கொண்டு செல்லும் பழக்கம் இருந்தது.

அதற்கு முடிவு கட்ட பம்பை - சன்னிதானம் இடையே ரூ.250 கோடியில் ரோப் கார் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால் வயநாடு இடைத்தேர்தல் வந்ததால் செயல்படுத்த முடியவில்லை.

தற்போது நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப் பட்டதால், ரோப்கார் அமைக்கும் பணிகளை துவக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது திருத்திய மதிப்பீட்டின் படி ரோப் கார் அமைக்க உத்தேசித்திருந்த 7 சப்போர்ட் பில்லர்களுக்கு பதில் தற்போது 5 பில்லர்கள் அமைக்கவும், ரோப் கார் பாதையில் வெட்ட முடிவு செய்திருந்த 300 மரங்களுக்கு பதில் தற்போது 80 மரங்களை மட்டும் வெட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2.7 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த ரோப் கார் மூலம் பம்பையில் இருந்து சன்னிதானத்தை 10 நிமிடங்களில் அடைந்து விடலாம். சன்னிதானத்திற்கு தேவையான அத்தியாவசிய பூஜை பொருட்கள் கொண்டு செல்லவும், அவசர காலங்களில் பயன்படுத்தி கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு உற்ஸவ காலத்திலேயே இந்தப் பணிகள் துவங்கி நிறைவடையும்', என்றனர்.






      Dinamalar
      Follow us