sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கேரளாவின் ‛'மில்மா' வால் தேனி ஆவினுக்கு பாதிப்பு

/

 கேரளாவின் ‛'மில்மா' வால் தேனி ஆவினுக்கு பாதிப்பு

 கேரளாவின் ‛'மில்மா' வால் தேனி ஆவினுக்கு பாதிப்பு

 கேரளாவின் ‛'மில்மா' வால் தேனி ஆவினுக்கு பாதிப்பு


ADDED : நவ 13, 2025 12:14 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கேரள அரசின் 'மில்மா' பால் நிறுவனம், ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 கூடுதலாக வழங்கி கொள்முதல் செய்வதால் தேனி ஆவினுக்கு பால் வழங்க கம்பம், கூடலுார் உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

ஆவின் அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் தினமும் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கம்பம், கூடலுார் பகுதிகளில் இருந்து அதிக பட்சம் 1200 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.

இப் பகுதியில் இருந்து மில்மா, தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ. 43க்கு பால் கொள்முதல் செய்கின்றனர். ஆவின் லிட்டர் ரூ. 33, ஊக்க தொகை ரூ.3 வீதம் வழங்குகிறோம். விவசாயிகளை சந்தித்து ஆவினுக்கு பால் வழங்க பேசி வருகிறோம். சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலுக்கு முன்பே 'அட்வான்ஸ்' தொகையை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றன. இதனால் பலர் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்குகின்றனர். கேரளாவின் 'மில்மா' நிறுவனம் லிட்டருக்கு கூடுதல் தொகை தருவதால் அந்த பகுதியில் கொள்முதல் செய்வது சவாலாக உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us