sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொச்சி --- தனுஷ்கோடி நெடுஞ்சாலை விரிவாக்கம்: 16 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

/

கொச்சி --- தனுஷ்கோடி நெடுஞ்சாலை விரிவாக்கம்: 16 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

கொச்சி --- தனுஷ்கோடி நெடுஞ்சாலை விரிவாக்கம்: 16 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

கொச்சி --- தனுஷ்கோடி நெடுஞ்சாலை விரிவாக்கம்: 16 கட்டடங்களுக்கு நோட்டீஸ்


ADDED : ஆக 31, 2025 04:15 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடர்பாக பழைய மூணாறில் 16 கட்டடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு பழைய மூணாறு பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு வசதியாக சர்வே பணிகள் அனைத்தும் பூர்த்தியாகின. அதில் ரோடு கடந்து செல்லுவதற்கு இடையூறாக பல கட்டடங்கள் உள்ளது. அதுபோன்று இடையூறாக உள்ள 16 கட்டங்களுக்கு நோட்டீஸ் அளித்த நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ரோடு கடந்து செல்லும் பகுதியினை கட்டங்களில் அடையாளப்படுத்தினர். அவற்றை 15 நாட்களுக்குள் தாமாக அகற்ற வேண்டும்.அகற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

மூணாறு நகரில் ஆற்றோரம் உள்ள 44 கடைகளின் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வருவாய்துறையினர் நோட்டீஸ் அளித்த நிலையில் பழைய மூணாறில் ரோடு விரிவாக்கத்திற்கு 16 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளித்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us