/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில தட்டு எறிதல் போட்டி மாணவருக்கு பாராட்டு
/
மாநில தட்டு எறிதல் போட்டி மாணவருக்கு பாராட்டு
ADDED : அக் 17, 2024 06:24 AM

கம்பம்: மாநில அளவில் சென்னையில் நடந்த தட்டு எறிதல் போட்டியில் கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவன் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களாக நடந்தது. மாவட்டங்களில் முதலிடம் வந்தவர்களுக்கான இறுதி போட்டிகள் சென்னையில் நடந்தது. தடகள போட்டிகளில் தட்டு எறிதல் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 34 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தாரனேஷ் பங்கேற்று மூன்றாம் இடத்தை பெற்றார். மூன்றாம் பரிசுக்கான வெண்கல பதக்கமும் பரிசு தொகை ரூ.50 ஆயிரமும் அரசு வழங்கியது.
சாதனை மாணவரை பள்ளியின் தாளாளர் மகுடகாந்தன், தலைமை ஆசிரியர் கென்னடி, உதவி தலைமை ஆசிரியர் மாவூற்றுவன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், பிரதீப் ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.

