sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயிலில் பிப்.10ல் கும்பாபிஷேகம் சின்னமனூரில் யாகசாலைகள் தயார்

/

பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயிலில் பிப்.10ல் கும்பாபிஷேகம் சின்னமனூரில் யாகசாலைகள் தயார்

பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயிலில் பிப்.10ல் கும்பாபிஷேகம் சின்னமனூரில் யாகசாலைகள் தயார்

பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயிலில் பிப்.10ல் கும்பாபிஷேகம் சின்னமனூரில் யாகசாலைகள் தயார்


ADDED : பிப் 04, 2025 05:41 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்.10ல் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலைகள் தயாராகி உள்ளது.

வரலாற்று சிறப்பு பெற்ற இக் கோயிலில் பூலாநந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றினார் என்பது தனிச் சிறப்பாகும். இங்குள்ள மூலவர் அளவுக்கு அளவானவர் என்ற சிறப்பு பெற்றவர். மூலவரை தரிசிக்கும் போது, பக்தர் என்ன உயரத்தில் இருக்கிறாரோ அந்த உயரத்திற்கு காட்சியளிப்பார்.

உயரமாக இருந்தால் உயரமாகவும், உயரம் குறைவாக இருந்தால் அவர் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.

இக்கோயில் கும்பாபிஷேகம் 2007ல் நடைபெற்றது. அதன் பின் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதியின்படி ஊர் முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்களாக இருந்து திருப்பணிகள் செய்துள்ளனர்.

இதனையொட்டி மகா கும்பாபிஷேகம் பிப் 10ல் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் வளாகத்தில் 19 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பூலாநந்தீஸ்வரர், சிவகாமியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு 3 பெரிய யாக குண்டங்களும், பரிகார தெய்வங்களுக்கு 16 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

திருப்பணி, கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணி தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல், காயத்ரி பெண்கள் பள்ளி தாளாளர் விரியன் சாமி, செயல் அலுவலர் நதியா உள்ளிட்ட உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us