ADDED : டிச 10, 2025 09:28 AM
உத்தமபாளையம்: நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வதில் இ பைலிங் முறையை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வழக்குகளை இ பைலிங் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் வழக்கறிஞர்களுக்கு சிரமம் உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இ பைலிங் கைவிட வலியுறுத்தி நேற்று உத்தமபாளையம் ஒருங்கினைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் அட்வேகேட் அசோசியேசன் மற்றும் பார் அசோசியேசன் சங்கங்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள்.
போராட்டத்திற்கு அட்வகேட் அசோசியேசன் தலைவர் கணேசன் தலைமை வகித்தார் . பார் அசோசியேசன் தலைவர் உமாபதி முன்னிலை வகித்தார். இரு சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

