ADDED : பிப் 17, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜெயோசிலி, வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன், டி.சுப்புலாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் ஆசிரியர் முருகபாரதி, பட்டதாரி ஆசிரியர் நாகராணி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முருகமணி, வட்டாரசுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.