ADDED : டிச 09, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் போடேந்திரபுரம் கோடாங்கிபட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்றிருந்த உப்பார்பட்டி பிள்ளையார் கோயில் தெரு கார்த்திக் 32, தமிழன் 24 ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 69 மதுபாட்டில்கள், ரூ.600 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.