sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஏழு மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல்

/

 ஏழு மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல்

 ஏழு மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல்

 ஏழு மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல்


ADDED : டிச 08, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரளாவில் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஏழு மாவட்டங்களில் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

இம்மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக டிச.9, 11ல் நடக்கிறது.

முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.9ல்) தேர்தல் நடக்கிறது.

அந்த மாவட்டங்களில் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது. மூணாறில் காங்கிரஸ், இடதுசாரி, பா.ஜ., ஆகிய கூட்டணி கட்சிகள் இறுதி நேரத்தில் 'ரோடு ஷோ' நடத்தி, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஏழு மாவட்டங்களிலும் 36,630 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

முதல்கட்ட தேர்தல் தொடர்பான விபரங்கள்:

ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 24,431, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 69,927 ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களில் டிச.11ல் தேர்தல் நடக்கிறது. அதற்கான பிரசாரம் நாளை (டிச.9) மாலையுடன் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us