/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடுகபட்டியில் அறிவுசார் நுாலகத்திற்கு இடம் தேர்வு
/
வடுகபட்டியில் அறிவுசார் நுாலகத்திற்கு இடம் தேர்வு
ADDED : ஏப் 02, 2025 06:45 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்ட அறிவுசார் நூலகம் கட்ட தமிழக அரசு ரூ.2.58 கோடி அனுமதி வழங்கியது.
இதற்காக வடுகபட்டி கலையரங்கம் பின்புறம் ரோட்டின் அருகே அரசு இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனவியல் பணி உள்ளிட்ட தேர்வுகளுக்கும், மாநில அரசு தேர்வாணையம் நடத்தும்குரூப்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்படும். இதற்கான பணிகளை வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், செயல் அலுவலர் உமாசுந்தரி மேற்கொண்டு வருகின்றனர்.