/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழமையான துணை மின் நிலையங்களில் முறையான பராமரிப்பு அவசியம்; கம்பம், பாளையம், சின்னமனுாரில் மின்தடையால் அவதி
/
பழமையான துணை மின் நிலையங்களில் முறையான பராமரிப்பு அவசியம்; கம்பம், பாளையம், சின்னமனுாரில் மின்தடையால் அவதி
பழமையான துணை மின் நிலையங்களில் முறையான பராமரிப்பு அவசியம்; கம்பம், பாளையம், சின்னமனுாரில் மின்தடையால் அவதி
பழமையான துணை மின் நிலையங்களில் முறையான பராமரிப்பு அவசியம்; கம்பம், பாளையம், சின்னமனுாரில் மின்தடையால் அவதி
ADDED : ஜூலை 09, 2025 06:58 AM

தேனி மாவட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட ஊர்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் வண்ணத்தி பாறை, உத்தமபாளையம், ராசிங்காபுரம், காமாட்சிபுரம், மதுராபுரி, ஆண்டிபட்டி உள்ளிட்ட சில துணை மின் நிலையங்கள் மிகவும் பழமையானவை. உயர் அழுத்த டவர் மின் பாதையில் இருந்து மின்சாரம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வோல்ட்டாக துணை மின் நிலையங்களில் உள்ள பவர் டிரான்ஸ்பார்மருக்கு வரும். பவர் டிரான்ஸ்பார்மர்
அதை 22 ஆயிரம் கிலோ வோல்ட்டாக மாற்றி நகரில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர்களுக்கு அனுப்பும். டிரான்ஸ்பார்மர்களில் இருந்து வீடுகளுக்கு 230 வோல்ட்டாக குறைத்து வழங்கும். இத் தொடர் பணியால் மாதந்தோறும் ஒரு நாள் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில், மின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
சமீப காலமாக கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் நகரங்களின் மின் சப்ளையில் பிரச்னை ஏற்படுகிறது. இதில் சின்னமனூரில் அடிக்கடி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. மேலும் குறைந்த அழுத்த மின் சப்ளையும் ஏற்படுகிறது. இதன் காரணம் துணை மின் நிலையங்களில் ஏதாவது ஒரு இயந்திரம் பழுது ஏற்பட்டு வருகிறது.
இதுபற்றி விசாரிக்கையில் மாதம் ஒரு நாள் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் போது, துணை மின் நிலையங்களுக்குள் பராமரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்வது இல்லை. மேலோட்டமாகவே பராமரிப்பு நடைபெறுகிறது.பழமையான துணை மின் நிலையங்களில் பிரேக்கர்களை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் அந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது தெரியவில்லை. துணை மின் நிலையங்களின் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் இதயமாக கருதப்படும் பேட்டரிகள் என்ன நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். அப்போது தான் தடங்கல் இல்லாத மின் சப்ளை இருக்கும்.
நந்தை வேகத்தில் வேளாண் இணைப்பு பிரிப்பு
வேளாண் இணைப்புகளை தனியாக பிரிக்க ரூ.50 கோடியில் பணிகள் மேற்கொள்ளும் போது, துணை மின் நிலையங்களின் பராமரிப்பும் செய்யப்படும் என்றனர். ஆனால் இப் பணியும் நத்தை வேகத்தில் நடக்கிறது. அனைத்து துணை மின்நிலலயங்களிலும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டால் தான் சப்ளை தடங்கல் இன்றி இருக்கும்.