sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டை கிரையம் எழுதி தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

வீட்டை கிரையம் எழுதி தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது

வீட்டை கிரையம் எழுதி தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது

வீட்டை கிரையம் எழுதி தருவதாக கூறி ரூ.63.66 லட்சம் மோசடி செய்தவர் கைது


ADDED : ஜன 01, 2025 10:14 PM

Google News

ADDED : ஜன 01, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி,:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, லட்சுமிபுரத்தில் உள்ள வீட்டை எழுதித் தருவதாக 63.66 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய கட்டட தொழிலாளி விஜயகுமார், 47, என்பவர் கைது செய்யப்பட்டார்.

தேனி, அரண்மனைப்புதுார் பசுமை நகரைச் சேர்ந்தவர் சுகந்தி, 32. இவர் தந்தை பாஸ்கரனுக்கும், லட்சுமிபுரத்தை சேர்ந்த விஜயகுமாருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 27ல் பாஸ்கரன் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். சுகந்தி வீட்டுக்கு வந்த விஜயகுமார், அவரது மனைவி கோகிலா, மகள் காவ்யா ஆகியோர், 'மகள் காவ்யா திருமணத்துக்கு பணம் தேவைப்படுவதால், லட்சுமிபுரத்தில் கோகிலா பெயரில் உள்ள 1,809 சதுரடி உள்ள வீட்டை கிரையம் செய்து தருவதாக 63.66 லட்சம் ரூபாய்க்கு சுகந்தியிடம் ஒப்பந்தம் செய்தனர். அன்றே சுகந்தியிடம் 33 லட்சத்து 66,200 ரூபாயை ரொக்கமாக வாங்கிக் கொண்டனர்.

அந்த வீட்டின் மீது, மூவரும் சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் தொகை 20 லட்சம் பணத்தையும் சுகந்தி செலுத்தினார். அதன் பின், 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக வாங்கினர். சுகந்தியிடம் மொத்தம் 63 லட்சத்து 66,200 வாங்கிய நிலையில், அந்த வீட்டை விஜயகுமார், கோகிலா ஆகியோர் இணைந்து மகள் காவ்யாவுக்கு தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்தனர். இதுகுறித்து சுகந்தி கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் சுகந்தி புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மனைவி மற்றும் மகள்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us