sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி ரூ.9.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

/

செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி ரூ.9.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி ரூ.9.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி ரூ.9.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது


ADDED : டிச 30, 2024 11:25 PM

Google News

ADDED : டிச 30, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி வியாபாரி ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் 56, ரூ.9.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேனியைச் சேர்ந்த ராஜ்குமாரை 41, க.விலக்கு போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார். தொழிலில் நஷ்டமடைந்த இவரிடம் தேனி ராஜ்குமார் அணுகி இரிடியம் விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதற்கிடையில் தேனி ராஜேஷ் ஜஸ்டின் ஜெயக்குமாரை போனில் தொடர்பு கொண்டு இரிடியம் இருந்தால் ரூ.5 கோடி வரை தருவதாக தெரிவித்தார். இந்த விபரத்தை ராஜ்குமாரிடம், ஜஸ்டின் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் இரிடியம் வாங்க ரூ.10 லட்சம் தேவைப்படும் எனவும் ராஜ்குமார் தெரிவித்தார். அதை நம்பி ஜஸ்டின் ஜெயக்குமார் ரூ.9.5 லட்சத்தை அவரிடம் கொடுத்தார்.

க.விலக்கு அருகே உள்ள லாட்ஜில் வைத்து இரிடியம் வாங்க முடிவானது. இரிடியத்தை கூடுதல் விலைக்கு வாங்க ராஜேஷ் தயாராகவுள்ளதாக ஜஸ்டின் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் ரூ.9.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்குமார் பழைய செம்பு பாத்திரத்தை இரிடியம் என கொடுத்தார். அங்கு வந்த ராஜேஷூம் இது இரிடியம் தான் என்றார்.

அதனை மதுரைக்கு கொண்டு வரவும், அங்கு பேசிக் கொள்ளலாம் என ராஜேஷ் தெரிவித்து சென்றார். அதன் பிறகு ராஜ்குமார், ராஜேஷ் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இருவரும் கூட்டுசேர்ந்து இரிடியம் எனக்கூறி ரூ.9.5 லட்சம் மோசடி செய்ததாக ஜஸ்டின் ஜெயக்குமார் க.விலக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணகுமார், எஸ்.ஐ., சவரியம்மாள்தேவி மற்றும் போலீசார் விசாரித்து ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான ராஜேைஷ தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us