sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நிதிநிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்தவர் கைது

/

நிதிநிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்தவர் கைது

நிதிநிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்தவர் கைது

நிதிநிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்தவர் கைது


ADDED : பிப் 07, 2025 02:13 AM

Google News

ADDED : பிப் 07, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனியில் நிதிநிறுவனத்தில் ரூ.1.01 கோடி கையாடல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த சாமிராஜாவை 45, போலீசார் கைது செய்தனர்.

தேனி பெரியகுளம் ரோட்டில் தனியார் நிதிநிறுவனம் உள்ளது. இதன் கிளைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.

இங்கு பொது மக்களுக்கு கடன் வழங்கி வட்டியுடன் வசூல் செய்யப்படும். தேனி அருகே ஆதிபட்டியை சேர்ந்த அருண்பாபு 37, தேனி மாவட்ட மேற்பார்வையாளராக பணி புரிந்தார். இவரின் பணி, வாடிக்கையாளர்களிடம் தவணைத் தொகையை வசூல் செய்து நிறுவன தலைமை அலுவலக வங்கிக்கணக்கில் செலுத்துவது.

களப்பணியாளர்கள் திலகராஜ், மகேஸ்வரன் வசூல் செய்து கொடுத்த பணத்தையும், அருண்பாபு வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூல் செய்த பணமும் சேர்த்து ஒரு கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 863 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்து தலைமறைவானார்.

நிதிநிறுவன மாவட்ட மேலாளர் மோகன்ராஜ் 2019ல் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அருண்பாபு 37, மனைவி ஜெயலதா 32, தாய்மாமா காமுத்துரை, மைத்துனர் சாமிராஜா ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அருண்பாபு கைதாகி நிபந்தனை ஜாமினில் உள்ள நிலையில் நேற்று சாமிராஜாவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us