ADDED : ஜூன் 05, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையிலான போலீசார் அரண்மனைபுதுார் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது மதுரை உசிலம்பட்டி பேரையூர் ரோடு குமார் தேவர் தெருவை சேர்ந்த விமல்ஆதித்தன் 27, மற்றும் 2 நபர்கள் ஒரு காரில் வந்தனர்.
போலீசார் சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா இருந்தது.
இருவர் தப்பிவிட்ட நிலையில் விமல் ஆதித்தனை போலீசார் கைது செய்து, காரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.