ADDED : மே 22, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் குமார் 26, லோடுமேன் ஆக வேலை செய்தார்.
மூன்று நாட்களுக்கு முன் குமார் உப்புதுறையில் இருந்து தங்கம்மாள்புரம் செல்லும் ரோட்டில் தனது டூவீலரில் சென்றார். தனியார் தேங்காய் குடோன் அருகே கட்டுப்பாடு இழந்து டூவீலரில் இருந்து கீழே விழுந்த போது தலையில் அடிபட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். தாயார் தமிழ்ச்செல்வி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.