sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு மூன்றாண்டு சிறை

/

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு மூன்றாண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு மூன்றாண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு மூன்றாண்டு சிறை


ADDED : ஜூன் 05, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கோயில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிகொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருஷநாடு கோம்பைத் தொழுவில் கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு 2018ல் அப்பகுதியை சேர்ந்தபி.சசிக்குமார், அருண்குமார், இ.சசிக்குமார் கோயில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்தபால்பண்ணை உரிமையாளர் முருகன் 55, அவரது நண்பர்கள் விவேக்ராஜா, ஜெயக்குமார், வெள்ளைச்சாமி, அட்சயன், ஈஸ்வரன், சிலம்பரசன், 17 வயது சிறுவன் ஆகிய8 பேர் கைகளில் அரிவாள்,கம்புகளுடன் கோயிலுக்கு சென்று முன்விரோதத்தில் பாண்டி என்பவரை திட்டினர். பின் விவேக்ராஜா, ஜெயக்குமார், 17 வயது சிறுவன் ஆகிய மூவர், அருண்குமாரை தாக்கினர்.

அதனை பி.சசிக்குமார் தடுத்தார். ஆத்திரம் அடைந்த பால்பண்ணை முருகன், அரிவாளால் பி.சசிக்குமாரை வெட்டினார்.

இதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டு தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிந்து 8பேரையும் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை நீதிபதி லலிதாராணி 2021ல் விடுதலை செய்தார்.

மிதியுள்ள 7 பேரின் வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து குற்றம் சாட்டப்பட்ட விவேக்ராஜா, ஜெயக்குமார், வெள்ளைச்சாமி, அட்சயன், ஈஸ்வரன், சிலம்பரசன் ஆகிய6 பேரை விடுதலை செய்து, பால்பண்ணை முருகனுக்கு மூன்றாண்டுகள் சிறை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சரவணக்குமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us