sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புதிதாக நடவு செய்ய 100 சதவீத மானியத்தில் 'மா' கன்றுகள்

/

புதிதாக நடவு செய்ய 100 சதவீத மானியத்தில் 'மா' கன்றுகள்

புதிதாக நடவு செய்ய 100 சதவீத மானியத்தில் 'மா' கன்றுகள்

புதிதாக நடவு செய்ய 100 சதவீத மானியத்தில் 'மா' கன்றுகள்


ADDED : செப் 28, 2025 03:32 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி வட்டாரத்தில் புதிதாக ' மா' நடவு செய்திட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ' மா ' ஒட்டு ரக கன்றுகள், இயற்கை உரம் வழங்கப்படுகிறது என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராஜமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது : போடி வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் புதிதாக ' மா ' நடவு செய்திட ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள ' மா ' ஒட்டு ரக கன்றுகள், இடு பொருட்களாக இயற்கை உரம் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இரண்டரை ஏக்கர் உள்ள விவசாயிகளுக்கு 280 ' மா ' ஒட்டு கன்றுகள், இயற்கை உரமும் வழங்கப்படும்.

புதிதாக ' மா ' நடவு, இடு பொருட்களாக இயற்கை உரங்கள் பெற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்தது அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று, ஆதார், சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, பாங்க் பாஸ் புக் நகலை போடி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து ' மா ' கன்று, இடு பொருட்களாக இயற்கை உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us