ADDED : அக் 11, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறையில் மந்தையம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் அதனை தொடர்ந்து அதிகாலை கணபதி ஹோமம், அனுக்ஞை, வருண பூஜைகள் நடந்தது.
கற்பக விநாயகர் மற்றும் மந்தை அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பொன்னம்படுகை, குமணன் தொழு, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மயிலாடும்பாறை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

