sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறந்த வெளியில் கிடந்து வீணாகிறது

/

பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறந்த வெளியில் கிடந்து வீணாகிறது

பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறந்த வெளியில் கிடந்து வீணாகிறது

பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறந்த வெளியில் கிடந்து வீணாகிறது


ADDED : மே 10, 2025 07:39 AM

Google News

ADDED : மே 10, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் இயந்திரம், ஜெனரேட்டர் ஆவின் அதிகாரிகள் அலட்சியத்தால் பல மாதங்களாக திறந்த வெளியில் கிடந்து வெயில்,மழையால் சேதமடைந்து வருகிறது.

பெரியகுளம் தாலுகாவில் விவசாயத்துடன் பால் மாடுகள் வளர்ப்பு அதிகம் உள்ளது.

பெரியகுளம், சிந்துவம்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், எண்டப்புளி உட்பட பல கிராமங்களிலிருந்து தினமும் 2500 முதல் 3000 லிட்டர் பால் உற்பத்தி செய்து பெரியகுளம்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு விவசாயிகள் வழங்குகின்றனர். இதில் உள்ளூரில் 800 லி., பால் விற்பனை செய்கின்றனர்.

மீதமுள்ள 1300 லிட்டர் பால் சங்கத்திலிருந்து, தேனி ஆவினுக்கு இரு லாரியில் தினமும் அனுப்பப்படுகிறது.

கிடப்பில் குளிரூட்டும் மையம்


பெரியகுளம் தாலுகாவில் நீண்ட தொலைவில் உள்ள சிந்துவம்பட்டி , குள்ளப்புரம் உள்ளிட்ட கிராமப் பகுதியிலிருந்து பால் கறந்து கேன்களில் நிரப்பி 25 கி.மீ., தூரம் உள்ள தேனி ஆவின் குளிரூட்டும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பால் கறவை செய்து நீண்டநேரம் குளிரூட்டாமல் இருப்பதால் அடிக்கடி பால் கெட்டுபோகிறது. பால் வீணாவதை தடுக்க பெரியகுளம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வளாகத்தில் 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் மையம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அலட்சிய அதிகாரிகள்


இதற்காக ஆவின் ரூ.40 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் நவீன இயந்திரத்தை கடந்த ஆண்டு நவம்பரில் வாங்கி சங்க வளாத்தில் இறக்கியது. இதற்கான அறை கட்டப்பட்டுள்ளது.

குளிரூட்டும் அறையில் நவீன இயந்திரங்களை பொருத்தி ஜனவரில் திறக்க ஏற்பாடு நடந்தது.

ஆவின் அதிகாரியின் அலட்சியத்தில் இத் திட்டம் முடங்கி உள்ளது.

ஆறு மாதங்களாக பால் குளிரூட்டும் இயந்திரம், ஜெனரேட்டர் திறந்த வெளியில் கிடந்து வெயில், மழையில் நனைத்து துருப்பிடிக்கும் அபாயத்தில் உள்ளது.

கட்டடம் கட்டி பூட்டி வைத்துள்ளனர். இத் திட்டம் செயல்படுத்தினால் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கெட்டு போகாமல் பாதுக்க இயலும்.

ஆனால் ஆவின் அதிகாரிகள் இது பற்றி கவலை கொள்வது இல்லை. எது எப்படி கிடந்தால் நமக்கென்ன என்ற மனநிலையில் அரசின் நிதியை வீணடித்து வருகின்றனர் என விவசாயிகள் குமுறுகின்றனர்.

இது பற்றி கூட்டுறவு பால் சங்க செயலாளர் வெள்ளைப்பாண்டி கூறுகையில, 'குளிரூட்டும் மையம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி ஆவின் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறோம்,' என்றார்.






      Dinamalar
      Follow us