sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பச்சை வாழை சாகுபடியில் இருந்து செவ்வாழைக்கு மாறும் விவசாயிகள் விலை கிடைப்பதால் மனமாற்றம்

/

பச்சை வாழை சாகுபடியில் இருந்து செவ்வாழைக்கு மாறும் விவசாயிகள் விலை கிடைப்பதால் மனமாற்றம்

பச்சை வாழை சாகுபடியில் இருந்து செவ்வாழைக்கு மாறும் விவசாயிகள் விலை கிடைப்பதால் மனமாற்றம்

பச்சை வாழை சாகுபடியில் இருந்து செவ்வாழைக்கு மாறும் விவசாயிகள் விலை கிடைப்பதால் மனமாற்றம்


ADDED : பிப் 20, 2025 06:09 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: பச்சை வாழை சாகுபடியாளர்கள் பல்வேறு காரணங்களால் செவ்வாழை சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர்.

தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், மலர்கள், தென்னை, வாழை, திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பழ வகை பயிர்களும் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. இங்கு செவ்வாழை, நாழிப் பூவன், நேந்திரன், ஜி 9 எனப்படும் பச்சை வாழை உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடியாகிறது.

மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டாலும் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டாரங்களில் மட்டும் அதிக பரப்பில் சாகுபடி யாகிறது. ஆனால் வாழையில் காற்று வீசும் மாதங்களில் வாழை ஒடிந்து சேதமடையும்.

வெடி வாழை மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். வெடி வாழை பாதிப்பு பச்சை வாழையில் மட்டுமே வருகிறது. பிற ரகங்களில் வருவது இல்லை.

செவ்வாழைக்கு நல்ல விலை கிடைக்கிறது ஆனால் பச்சை வாழைக்கு விலை குறைவாகத் தான் கிடைக்கிறது.

மேலும் பச்சை வாழை ஏற்றுமதியும் குறைந்து விட்டது. மாறாக நாழிப் பூவன் , செவ்வாழை ஏற்றுமதியாகிறது.

எனவே படிப்படியாக பச்சை வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை குறைவு, நோய் தாக்குதல் போன்ற அம்சங்களை கருதி, செவ்வாழை சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர். பச்சை வாழை சாகுபடி பரப்பு குறையத் துவங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us